26.4 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

கட்சிக்குள் பிளவேற்படுத்தும் உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: மாவை சேனாதிராசா

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் முகமாகசெயற்பட்ட தமிழரசு கட்சியில் உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் எதிர்வரும் 11,12ம் திகதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி அவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாராஜா தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவ கட்சியாக இருந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஒரு புதிய அணுகுமுறையை சிபார்சு செய்திருக்கின்றார்கள்.

அதாவது இந்த தேர்தல் வட்டார அடிப்படையிலும் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற அந்த முறையில் ஒரு புதிய அணுகல் முறையினை நாங்கள் பரீட்சித்து பார்க்க வேண்டும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுடைய கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது.

இலங்கை தமிழரசுகட்சியினுடைய மத்திய குழு அந்த சிபாரிசை செய்திருந்தது அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலிலே போட்டி இடுவதன் மூலம் வட்டார அடிப்படையிலே வருகின்ற கட்சிகளும் அதைவிட விகிதாசார அடிப்படையில் ஏனைய கட்சிகளும் பெறுகின்ற எஞ்சிய வாக்குகள் மூலம் வருகின்ற அந்த பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பெறலாம். எல்லாரும் ஒன்றாக எங்களுடைய வடகிழக்கில் பிரதேச சபைகளில் மாநில சபை நகர சபை என்றாலும் பிரதேச சபையாக இருந்தாலும் ஒரு பெரும்பான்மையினை நாங்கள் பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்தி இந்த முறை தேர்தலில் களமிறங்குவோம் என கலந்து பேசினோம்.

அந்த தீர்மானத்தை இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். தமிழரசு கட்சி தன்னுடைய செயற்குழுவில் சிபார்சு செய்தது. நாங்கள் ஒவ்வொருக்கொருவர் முரண்பட்டுக் கொள்ளாமல் தேர்தலில் பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு நாங்கள் ஆட்சியினை அமைப்போம். அந்த காரணங்களுக்காக எங்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகள் ஏற்படாமல் பிளவுகள் ஏற்படாமல் ஒற்றுமையாக நாங்கள் மீண்டும் கூடி வட கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஒரு அணுகல் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்.

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளை விமர்சித்தல் முரண்பட்ட கருத்துக்களை வேண்டுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன இந்த வகையில் தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள் இன்று காலையிலும் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

திரு சுமந்திரன் அவர்களின் அறிக்கை தவராசாவின் அறிக்கையின் அடிப்படையிலும் மிகவும் அதிருப்தி அடைந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் எமது கட்சி பிரதிநிதிகள் என்னிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த மாதம் 11,12 திகதிகளில் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் பிரச்சார மேடைகளில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கின்றேன்.

எனவே எதிர்வரும் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஏனைய கட்சிகளை விமர்சித்தவர்கள் கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை நான் எடுக்க உள்ளேன்.

நான் எந்த பதவியில் இருந்தாலும் அவர்களுக்குரிய நடவடிக்கை எடுப்பேன் மத்திய செயற்குழுவில் கட்சியிலே பொருத்தமற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரித்து விடும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலத்திலும் நாங்கள் அந்த விடயங்களை அவதானிக்காமல் விட்டால் அவர்கள் இனத்தை பிளவுபடுத்துவதற்கும் அரசியல் தீர்வு பெறுவதற்கான நடவடிக்கைகளை குழப்புவதற்கும் மக்கள் மத்தியில் எவ்வளவு ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதித்தவர்களாக இருக்கும்.

ஆனபடியினால் எங்களுடைய மக்களுடைய ஒற்றுமை ஒற்றுமையான அரசியல் தீர்மானத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடாத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இவ்வாறான சக்திகளுக்கு நாங்கள் கட்சியில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன இடமளிக்கக்கூடாது என்பதற்காக மிக பொருத்தமான வகையில் தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு இந்த விடயங்களை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையில் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருந்தால் ஒழுங்கு விதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment