29.8 C
Jaffna
April 20, 2024
இலங்கை

‘மைத்திரியை மன்னிக்கலாம்: ஆனால்…’

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு அடுத்த நாள், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தவறுகளை ஏற்று பதவி விலகியிருந்தால் கத்தோலிக்க திருச்சபை அவரை மன்னித்திருக்கும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“குண்டுத் தாக்குதல் நடந்த மறுநாளே முன்னாள் ஜனாதிபதி தனது தவறுகளை ஏற்றுக்கொண்டு பதவியை ராஜினாமா செய்திருந்தால் அவரை மன்னித்திருப்போம்” என கொழும்பு பேராயர் சமூக தொடர்பு பிரிவு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று தெரிவித்தார்.

“சிறிசேன என்ன செய்திருக்க வேண்டும் என்றால் அவர் பொறுப்பேற்றுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதுதான். இதை உயர்நீதிமன்றம் நிரூபித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி தேசத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக கூறுகிறது. இதனால் உயிர் மற்றும் உடமை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தீர்ப்பை மேற்கோள் காட்டி அருட்தந்தை கூறினார்.

“மன்னிப்பு கேட்பதற்கு முன், சிறிசேன தனது தவறுகளை ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

“பொறுப்பான அனைவரையும் மன்னிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் வரவிருக்கும் தாக்குதல் பற்றிய முன் தகவலைப் பெற்ற பிறகு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் பின்னணியில் உள்ள உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப் பல்கலையின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி

Pagetamil

வேலணையில் அன்னை பூபதி நினைவு நிகழ்வு

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின கூட்டத்திற்கு மறைமுக தடையா?

Pagetamil

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம் ஆசிரியை கைது!

Pagetamil

அலுவலக நேரத்திற்கு முன்பாக படிப்படியாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்; மக்கள் அசௌகரியம்: பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

Pagetamil

Leave a Comment