28.5 C
Jaffna
March 20, 2023
இலங்கை

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வசந்த முதலியை விளக்கமறியலில் வைக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வசந்த முதலிகே எந்தவொரு சர்வதேச அமைப்பிடமிருந்தோ அல்லது பயங்கரவாத அமைப்பிடமிருந்தோ பணம் பெற்றமைக்கான ஆதாரங்கள் இல்லையென நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் 3 குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதால், ஏனைய வழக்குகளிலிருந்து அடுத்த சில நாட்களில் பிணை பெறலாமென வசந்த முதலிகேவின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

Pagetamil

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

Pagetamil

வாரிசு அரசியல் காலம் முடிந்து விட்டது; நாமல் வேறு வேலை தேட வேண்டும்: விமல் வீரவன்ச!

Pagetamil

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை நீடிப்பு!

Pagetamil

வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை, குத்தகைக்கு வழங்குவதை கண்டித்து மன்னாரில் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!