31.3 C
Jaffna
March 28, 2024
உலகம்

டென்மார்க்கில் மசூதி, துருக்கி தூதரகத்தின் எதிரில் குர் ஆன் எரிப்பு!

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார்.

டேனிஷ் மற்றும் ஸ்வீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ராஸ்மஸ் பலுடன் ஏற்கனவே ஜனவரி 21 அன்று ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு போராட்டத்தை நடத்தி துருக்கி அரசாங்கத்தை கோபப்படுத்தியிருந்தார்.

வெள்ளிக்கிழமை, அவர் ஒரு மசூதியின் முன்பும், கோபன்ஹேகனில் உள்ள துருக்கிய தூதரகத்தின் முன்பும் குர்ஆன் பிரதிகளை எதிர்த்தார். ஸ்வீடன் நேட்டோவில் அனுமதிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடருவதாக அறிவித்தார்.

ஸ்வீடனும் அண்டை நாடான பின்லாந்தும் தங்கள் அணிசேராக் கொள்கைகளில் இருந்து ஒரு வரலாற்று விலகல் கொள்ளை மாற்றத்தை செய்து, நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர முயல்கின்றன.

இருப்பினும், அவர்களின் சேர்க்கைக்கு அனைத்து நேட்டோ உறுப்பினர்களிடமிருந்தும் ஒப்புதல் தேவைப்படும். பலுடானின் தற்போதைய நடவடிக்கைகள் காரணமாக ஸ்வீடனின் முயற்சியைத் தடுக்கும் என்று துருக்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கு முன்பே, குர்திஷ் ஆயுதக் குழுக்கள், ஆர்வலர்கள் மற்றும் “பயங்கரவாதிகள்” என்று கருதும் பிற குழுக்களை ஒடுக்குமாறு இரு நாடுகளுக்கும் துருக்கி அழுத்தம் கொடுத்தது.

தூதுவர் அழைப்பு

துருக்கியின் அரசு நடத்தும் அனடோலு ஏஜென்சி, டேனிஷ் தூதர் துருக்கிய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, “இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை வன்மையாகக் கண்டித்துள்ளனர், இது ஒரு வெறுப்புக் குற்றத்தை தெளிவாகக் கொண்டுள்ளது”. என துருக்கிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தது.

தூதரிடம் “டென்மார்க்கின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், அனுமதி ரத்து செய்யப்படும் என்று துருக்கி எதிர்பார்க்கிறது என்றும் கூறப்பட்டது.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் பின்னர் பலுடானை “இஸ்லாத்தை வெறுப்பவர்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அவர் ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.

“ஐரோப்பாவில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இத்தகைய கொடூரமான செயல்களுக்கு சகிப்புத்தன்மை காட்டுவது அமைதியான சகவாழ்வு நடைமுறையை அச்சுறுத்துகிறது. இனவெறி மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களைத் தூண்டுகிறது” என்று அமைச்சகம் கூறியது.

டேனிஷ் வெளியுறவு மந்திரி Lars Lokke Rasmussen டேனிஷ் ஊடகத்திடம், இந்த சம்பவம் துருக்கியுடனான டென்மார்க்கின் “நல்ல உறவை” மாற்றாது என்று கூறினார்,

டென்மார்க்கின் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் சட்டங்கள் குறித்து துருக்கியுடன் பேச விரும்புவதாக கூறினார்.

“இப்போது எங்கள் பணி, டென்மார்க்கில் நமது திறந்த ஜனநாயகத்துடன் நிலைமைகள் எப்படி இருக்கின்றன என்பதையும், ஒரு நாடாக டென்மார்க்கிற்கும் – நமது மக்களுக்கும் – வித்தியாசம் உள்ளது என்பதைப் பற்றியும், பின்னர் வலுவான மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட தனிப்பட்ட நபர்களைப் பற்றியும் துருக்கியுடன் பேசுவதாகும்“ என லோக்கே ராஸ்முசென் கூறினார்.

கடந்த வாரம் ஸ்வீடனில் பலுடனின் நடவடிக்கைக்குப் பிறகு, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், நேட்டோவில் இணையும் முயற்சிக்கு ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம் என்று ஸ்வீடனுக்கு எச்சரித்தார். ஸ்வீடன் மற்றும் பின்லாந்தின் அங்கத்துவம் பற்றி விவாதிக்கும் ஒரு முக்கிய கூட்டத்தை பிரஸ்ஸல்ஸில் துருக்கி காலவரையின்றி ஒத்திவைத்தது.

பொலிஸ் பாதுகாப்பு

வெள்ளியன்று, பலுடான் முதலில் கோபன்ஹேகனில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே முஸ்லிம்களின் புனித நூலின் பிரதியை எரித்தார். அவர் பேசும்போது மசூதியில் இருந்து உரத்த இசை ஒலித்தது. அவர் பேசுவதை தடுக்க ஒரு  வெளிப்படையான முயற்சியாக அதிக சத்தத்துடன் இசை ஒலித்ததாக, தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த மசூதிக்கு டென்மார்க்கில் இடமில்லை” என்று பலுடன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு நேரடி ஒளிபரப்பில் கூறினார். பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்து கலகத் தடுப்புப் பொலிஸாரால் அவர் சூழப்பட்டிருந்ததை வீடியோ காண்பித்தது. பின்னர், போலீஸ் காரில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

பின்னர், துருக்கிய தூதரகத்தின் முன் தோன்றிய பலுடான் “அவர் [எர்டோகன்] ஸ்வீடனை நேட்டோவில் அனுமதித்தவுடன், நான் துருக்கிய தூதரகத்திற்கு வெளியே குர்ஆனை எரிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இல்லையெனில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 2 மணிக்கு நான் அவ்வாறு செய்வேன்“ என்றார்.

ஒரு வழக்கறிஞரான பலுடன், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய இரு நாடுகளிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளை நிறுவினார், அவை தேசிய, பிராந்திய அல்லது நகராட்சித் தேர்தல்களில் எந்த இடங்களையும் வெல்லத் தவறிவிட்டன. கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அவரது கட்சி நாடு முழுவதும் வெறும் 156 வாக்குகள் மட்டுமே பெற்றது.

பலுடானின் நடவடிக்கையைக் கண்டித்து பெரும்பான்மையான முஸ்லீம் நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பாகிஸ்தான், ஈராக், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் நடந்த கண்டனங்களும் போராட்டங்களும் மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஸ்வீடன் தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சில ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையில், குர்ஆன் எரிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்கள் அல்லது மேற்கத்தியர்கள் அடிக்கடி வரும் இடங்களுக்கு எதிரான பதிலடித் தாக்குதல்கள் குறித்து துருக்கியிலுள்ள அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment