29.5 C
Jaffna
March 27, 2023
இந்தியா

மகன் இறந்ததும் 28 வயது மருமகளை மனைவியாக்கிய 70 வயது முதியவர்

மகன் இறந்து விட்டதால் 28 வயது மருமகளை மாமனார் மனைவியாக்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தின் சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் இவர் தனது மருமகளை பூஜா (28) சமீபத்தில் கோவிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கணவர் இறந்த பிறகு பூஜா தனிமையில் இருந்தாக சிலர் கூறுகின்றனர். அதனால் மாமனாரை மணக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

முதியவரின் திருமணம் குறித்த பேச்சு சமூக ஊடகங்கள் மூலம் அந்த கிராமத்தையும் காவல் நிலையத்தையும் எட்டியுள்ளது.

வைரலாகி வரும் புகைப்படத்தின் மூலம் தான் இந்த திருமணம் குறித்து எங்களுக்கு தெரிய வந்ததாக காவல் நிலைய அதிகாரி கூறினார். இது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. என்றும் இது இருவருக்கு இடையே உள்ள பரஸ்பர விவகாரம் என்றும், யாருக்கேனும் புகார் இருந்தால், போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Pagetamil

நிகழ்ச்சிகளுக்காக லண்டன் சென்ற இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி

Pagetamil

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

Pagetamil

‘நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்’: எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

Pagetamil

நகை திருட்டு வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் விசாரணை நடத்த முடிவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!