கம்பளை குருந்துவத்தையில் உள்ள மெதகொட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகி இருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தேயிலை தொழிற்சாலை தீப்பற்றி எரிவதாக குருதுவத்தை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் கண்டி தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தொழிற்சாலையின் உரிமையாளரின் மகனும் தொழிலாளி ஒருவரும் தீயில் கருகி அவர்களில் ஒருவர் கம்பளை போதனா வைத்தியசாலையிலும் மற்றையவர் குருதுவத்த பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நஷ்டம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்றாலும், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1