அனுராதபுரம், எலயபத்துவ பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
எலயபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1