வியன்னாவில் இராணுவப் பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு பற்றிய பேச்சுவார்த்தைக்கான ரஷ்யாவின் தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் “அணு ஆத்திரமூட்டல்களை” தடுக்க மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“உக்ரைன் இராணுவ இயந்திரத்தின் மேற்கத்திய ஆதரவாளர்களை அணுசக்தி ஆத்திரமூட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை ஊக்குவிப்பதற்கு எதிராக நாங்கள் எச்சரிக்கிறோம். Leopard 2 டாங்கிகள், பிராட்லி மற்றும் மார்டர் கவச காலாட்படை அமைப்புக்கள் யுரேனிய ஆயுதங்களுடன் கூடிய கவச-துளையிடும் எறிகணைகளை கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவற்றின் பயன்பாடு அப்பகுதியின் மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் ஈராக்கில் அதுதான் நடந்தது.
நேட்டோ தயாரித்த கனரக ஆயுதங்களுக்கான அத்தகைய வெடிமருந்துகள் உக்ரைனிற்கு வழங்கப்பட்டால், ரஷ்யாவிற்கு எதிரான அழுக்கு அணுகுண்டுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனைத்து விளைவுகளையும் போலவே நாங்கள் கருதுவோம்” என அவர் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த OSCE மன்றத்தில் கூறினார்.
ஜேர்மன் அரசாங்கம் 14 Leopard 2 A6 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்தது. தவிர, சில நேட்டோ நாடுகளில் உள்ள அந்த வகை டாங்கிகளை மறுஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கும்.
ஜேர்மனிக்கான ரஷ்ய தூதர் செர்ஜி நெச்சயேவ் இந்த முடிவை “மிகவும் ஆபத்தானது” என்று சாடினார், ஏனெனில் இது “மோதலை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்துகிறது.”
ஜேர்மனியின் தேர்வு, இரண்டாம் உலகப் போரின் போது செய்யப்பட்ட நாஜி குற்றங்களுக்கு “வரலாற்றுப் பொறுப்பை அங்கீகரிக்க ஜெர்மனியின் இறுதி மறுப்பு” என அவர் குறிப்பிட்டார்.