25.9 C
Jaffna
March 29, 2024
மலையகம்

நானுஓயா விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் இறுதிக்கிரியை; ‘வேகமாக செல்ல வேண்டாமென கத்தினோம்’!

நுவரெலியா – நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 51 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 7 பேரை பலியெடுத்த பேருந்து, அதிவேகமாக செலுத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரியின் தரம் 11 மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேரூந்து, சுற்றுலா முடிந்து கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. டிக்ஓயாவிலிருந்து நுவரெலியா நோக்கி ஒரே குடும்பத்துடன் பயணித்த வானுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அந்த இரண்டு வாகனங்களுடன் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்தில் சிக்கியது.விபத்தில் வான் கிட்டத்தட்ட முற்றாக சேதமடைந்துள்ளது. பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கீழே விழுந்தது.

வானில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.இதில் 3 பெண்களும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில், பேருந்தில் ஏராளமான மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 47 பேர் பயணம் செய்தனர், மேலும் 41 மாணவர்கள் காயமடைந்தனர்.

பேருந்து அதிவேகமாக சென்றது. “நாங்கள் கத்தினோம், மெதுவாக செல்லுமாறு அவரிடம் கெஞ்சினோம், ஆனால் அவர் தொடர்ந்து அதிக வேகத்தில் ஓட்டினார்,” என்று மாணவன் ஒருவர் கூறினார்.

பேருந்தின் முன் வரிசை ஒன்றில் தான் இருந்ததாகவும், வான் மற்றும் முச்சக்கர வண்டியில் மோதியதை தான் பார்க்கவில்லை என்றும், ஆனால் பேருந்தின் பின் பகுதியில் நின்றிருந்த தனது நண்பர்கள் வான் மோதி பல மீட்டர் தூரம் முன்னோக்கி தள்ளப்பட்டதை பார்த்ததாகவும் மாணவர் கூறினார்.

இதற்கிடையில், மற்றொரு மாணவர் கூறுகையில், பேருந்து பல வளைவுகள் இருந்தபோதிலும் சாலையின் சரிவில் செல்லும் போது வேகம் கூடியது போல் தெரிகிறது.

பேருந்து வான் மீது மோதியதால், பேருந்தின் பின் இருக்கையில் இருந்த மாணவர்கள் முன்னோக்கி வீசப்பட்டனர்.

விபத்து நடந்த போதுமணி 7.30ஐ நெருங்கிவிட்டது. இருட்டாக இருந்ததால், பேருந்து, வான் மீது மோதியதை அவர் பார்க்கவில்லை, ஆனால் பலத்த சத்தம் கேட்டது என அந்த மாணவன் தெரிவித்தார்.

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததை அடுத்து, சுயநினைவின்றி இருந்த மாணவர்களை கிராம மக்களின் உதவியுடன் காயமடையாத மாணவர்கள் வீதிக்கு ஏற்றிச் சென்றதாக அவர் கூறினார்.

மாணவர் தனக்கு சிறிய காயங்கள் மட்டுமே இருப்பதாகவும், விபத்து நடந்தவுடன் உடனடியாக தனது தந்தையை அழைத்ததாகவும் அவர் கூறினார்.

விபத்தில் உயிரிழந்த, ஹட்டன் டிக்ஓயா நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் இறுதிக்கிரியைகள் ஹட்டன் டிக்ஓயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் 22ம் திகதி காலை இடம்பெற்றது.

அப்துல் ரஹீம் (54) தந்தை, ஏ.ஆயிஷா (42) தாய், ஏ. மரியம் (11) மகள், ஏ. ஹபீனா (07)  மகள், முகமது சைம் (14) உறவினர் ஆகியோரின் இறுதிக்கிரியைகள் நடந்தன.

டிக் ஓயா பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட தொழுகையின் பின்னர் உயிரிழந்த ஐவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதுடன், பெருமளவான பிரதேச முஸ்லிம்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அப்துல் ரஹீம் மற்றும் அவரது உறவினர் முகமது சைம் ஆகியோர் ஒரே கல்லறையிலும், தாய் மற்றும் மகள்கள் ஒரே கல்லறையிலும் அடக்கம் செய்யப்பட்டனர்.

குடும்பத்தின் உறவினர்கள் 10 பேர் வானில் பயணித்துள்ளதுடன், மற்றைய நால்வரும் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்துல் ரஹீம் மற்றும் அவரது குடும்பத்தினர் நுவரெலியாவில் வசிக்கும் நோய்வாய்ப்பட்ட உறவினரை பார்க்க நுவரெலியா சென்றுள்ளனர். செல்லும் போதே விபத்து நேர்ந்துள்ளதாக அவர்களது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்துல் ரஹீமின் நான்கு உறவினர்களும் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர், அவர்களும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உறவினர் மேலும் தெரிவித்தார்.

விபத்தை தொடர்ந்து தமைறைவான 62 வயதான பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment