நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி கொத்மலை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவில் தேசிய அடையாள அட்டை விடயத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இக்கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவத்தின் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் இரண்டு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவின் சமசமாஜ கட்சி அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு மாத்திரம் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வானூர்தி சின்னத்தில் வலப்பனை, கொட்டகலை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு விமல் வீரவனசவின் கட்சியான சுதந்திர மக்கள் முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.