வடமராட்சி கிழக்கு கடலில் மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகளில் இருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக, ஆண் ஒருவரும், 2 வயதான குழந்தையொன்றும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மாரில் இனஅழிப்பிற்குள்ளாகும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் 104 பேர், நேற்று உடுததுறைக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் ஆபத்தான கடல் பயணம் மூலம் மலேசியா செல்ல முற்பட்டது தெரிய வந்தது.
அவர்கள் இன்று காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1