இன்றும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தாங்கள் அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்தார்.
அதன்படி, பகலில் ஒரு மணி நேர மின்வெட்டும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிட மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1