29.5 C
Jaffna
April 19, 2024
இந்தியா

4 மாநிலங்களில் 6 திருமணங்கள்: பாடப்போன இடங்களிலெல்லாம் திருமணம் செய்த கல்யாண ராமன்!

4 மாநிலங்களை சேர்ந்த, 6 பெண்களை திருமணம் செய்த பீகார் நபரின் லீலைகளை கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.

பீகாரில் ஜவதாரி கிராமத்தில் பர்ஹாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சோட்டு குமார். இவரது மனைவி மஞ்சு. அவர்களிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஒன்றரை வருடங்களின் முன், குழந்தைக்கு மருந்து வாங்கி வருவதாக கூறி, வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட சோட்டு வீடு திரும்பவேயில்லை.

மஞ்சுவின் சகோதரர் விகாஸ், கொல்கத்தா செல்வதற்காக ஜமுய் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரெயில் நிலையத்தில் மற்றொரு பெண்ணுடன் சோட்டு ஒன்றாக சென்றுள்ளார். இதனை கவனித்த விகாஸ், சோட்டுவை பிடித்துக் கொண்டார்.

மனைவி மஞ்சுவை எப்பொழுது அழைத்துச் செல்வீர்கள் என கேட்ட போது, அவர் பதில் சொல்லவில்லை.

சோட்டுடன் நின்ற பெண், தானே அவரது மனைவியென்றார்.

இதையடுத்து, விகாஸ் தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து சோட்டுவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்த சூழலில், காவல் நிலையத்திற்கு வந்த மஞ்சுவின் தாயார் கோபியா தேவி போலீசாரிடம் கூறும்போது, 2018ஆம் ஆண்டு எனது மகள் மஞ்சுவுடன் சோட்டுக்கு திருமணம் நடந்தது. இருவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். ஒன்றரை வருடத்திற்கு முன் மருந்து வாங்கி வருகிறேன் என கூறி சென்றவர் திரும்பி வரவேயில்லை என கூறியுள்ளார்.

விகாஸ் கூறும்போது, எனது சகோதரி சோட்டு வருவார், வருவார் என நீண்டகாலம் காத்திருந்து வருகிறார். ஆனால், அந்த பெண்ணை போய் சோட்டு தனது மனைவி என கூறுகிறார் என வேதனை தெரிவித்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில்,  2011ஆமட் ஆண்டு ராஞ்சியை சேர்ந்த கலாவதி என்ற பெண்ணுடன் சோட்டுவுக்கு திருமணம் நடந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

பின்னர் 2018ஆம் ஆண்டு மஞ்சுவை திருமணம் செய்துள்ளார். சோட்டு, மஞ்சுவை திருமணம் செய்தது, கலாவதிக்கு தெரியும்.

எனினும், சோட்டு சந்தோசமாக இருக்கிறார் என்பதால் பேசாமல் விட்டு விட்டார்.

மா சாரதா என்ற பெயரிலான இசைக்குழுவில் சோட்டு பாடகராக இருந்து வந்துள்ளார். சோட்டு பாட்டுப்பாடப் போகும் இடங்களில்லாம் ஒரு திருமணம் செய்துள்ளார். சினாவரியா, சுந்தர்காண்ட், ராஞ்சி, சங்ராம்பூர், டெல்லி மற்றும் தியோகார் பகுதியில் தலா ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொருவருடனும், சோட்டுவுக்கு குழந்தை உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கேஜ்ரிவால்” – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

Pagetamil

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

Pagetamil

ரூ.200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி!

Pagetamil

Leave a Comment