29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஆசிரியர் இடமாற்றத்திற்கு புதிய பொறிமுறை: கல்வியமைச்சர்!

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான புதிய பொறிமுறையை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிந்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் பிரேமஜயந்த, அரச ஊழியர்களை இடமாற்றம் செய்வது போன்று ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல் மாணவர்களின் தேவைக்கேற்ப பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஏனைய அரச நிறுவனங்களைப் போன்று இடமாற்றங்கள் வழங்கப்படுமாயின், பாடசாலைகள் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்குப் போராடும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக விஷயங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் உறுதியளித்தார்.

தற்போது புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாததால் வேலை வாய்ப்பு, தொழிற்சங்க விவகாரங்கள் மற்றும் இடமாற்ற வாரிய மோதல்கள் போன்ற பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டில் தேவையான தொழில்நுட்பம் காணப்படுகின்ற போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment