30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

“வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி மூளாயில் மக்கள் போராட்டம்!

வலிகாமம் மேற்கில் காணப்படுகின்ற பிரதான மூன்று வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி வலிகாமம் மேற்கு பிரதேச மேற்கு பிரதேச வாழ் பொதுமக்கள் இணைந்து மூளாய் பிரதான வீதியை முடக்கி பொதுமக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்

காரைநகருக்கு செல்லும் குறித்த பிரதான வீதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அந்த வீதிகளை திருத்தம் செய்து தருமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் போக்குவரத்துகள் முடங்கின.

வலி மேற்கு மக்களுக்கு வசந்தம் இல்லையா? ஏசி அறையில் இருந்து வெளியே வாருங்கள் எங்கள் அவலங்களை பாருங்கள்! வடமாகாண ஆளுநரை மேற்கில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்! வலி மேற்கில் வசிப்பவர்கள் மக்களா மாக்களா! நகரத்திலும் கிராமத்திலும் வீதிகளில் வேற்றுமையா! 782,784,786 வீதிகளால் பயணிக்கும் மக்கள் வலிகளுடன் செல்வதா! RDA அதிகாரிகளே உங்கள் அசந்தமே எங்கள் அவலங்கள் இனியாவது திரும்பிப் பாருங்கள்! யாழ்- மானிப்பாய் -காரைநகர் ,மாவடி- மூளாய் -வட்டுக்கோட்டை பொன்னாலை வீதிகளை உடன் புனரமையுங்கள்! இந்த பதாகைகளை ஏந்தியவாறு கோஷத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் சங்கானைப் பிரதேச செயலகத்திற்கு விரைந்ததோடு , பிரதேச செயலரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர். என்பது வலிமைக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் சச்சிதானந்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான பொன்ராசா,இலங்கேஸ்வரன், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment