நொக் அவுட் சுற்றிற்கு முன்னேறின நெதர்லாந்து, செனகல்!

Date:

கட்டார் உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த ஆட்டங்களில் நெதர்லாந்து, செனகல் அணிகள் வெற்றியீட்டின.

அல் பயட் ஸ்டேடியத்தில் நடந்த குரூப் ஏ போட்டியில் நெதர்லாந்து, கட்டார் அணிகள் மோதின.

போட்டியை நடத்தும் கட்டார் இந்த தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டது.

இன்றைய ஆட்டத்தில் 2-0 என நெதர்லாந்து வெற்றியீட்டியது. அந்த அணியின் C. Gakpo 26வது நிமிடத்திலும், F. de Jong 49 வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

கலீபா சர்வதேச மைதானத்தில் நடந்த மற்றொரு குரூப் ஏ போட்டியில் செனகல்- ஈக்வடோர் அணிகள் மோதின. இதில் 2-1 என செனகல் வெற்றியீட்டியது.

இதன்மூலம் இரண்டு அணிகளும் குரூப் 16 சுற்றிற்கு முன்னேறியுள்ளன.

செனகல் 2002 ஆம் ஆண்டின் பின்னர் முதன்முறையாக நொக் அவுட் சுற்றிற்கு முன்னேறியுள்ளது.

குரூப் 16 சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியை செனகல் எதிர்கொள்ளும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலிமுகத்திடல் மின்கம்பத்தில் ஏறி போராடிய இளைஞன்!

"களனி விகாரையில் தியானம் செய்துவிட்ட வந்த போது நான் பொலிசாரால் கைது...

சர்ச்சைப் பிக்கு சிறைக்குள்ளும் சலசலப்பு!

கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

உலகம் மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது: ரஷ்ய ஜனாதிபதி புடின்!

சர்வதேச நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், உலகம் மிகவும் ஆபத்தானதாகி வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்