பேஸ்புக் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் கைது!

Date:

வெலிகம பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 9 இளைஞர்களை கைது செய்துள்ளதாக மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சட்டவிரோத போதைப்பொருள், கஞ்சா மற்றும் இனந்தெரியாத போதைப்பொருளுடன் 08 பேரை பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் 21, 24, 27, 35, 22, 17 வயதுடைய பெலியத்த, சியாவலல, உடுகாவ – தெலிஜ்ஜவில, கனங்கே கடவிடிய, மிரிஸ்ஸ, பெலான மற்றும் ரணால ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருந்துக்கு நாடளாவிய ரீதியில் இருந்து பலர் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்