30.7 C
Jaffna
March 29, 2024
இந்தியா

‘காதலித்து ஏமாற்றும் பெண்களிற்கு மரணமே தண்டனை… 14 வருடத்தில் வெளியே வந்துவிடுவேனே’: இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற கொடூர காதலனின் பதற வைக்கும் வாக்குமூலம்!

காதலிக்க மறுத்த யுவதியை கழுத்தறுத்த காதல் வெறியன், “14 வருடத்தில் வெளியில் வந்து விடுவேன்தானே“ என தெரிவித்து பொலிசாரையும் திகைக்க வைத்துள்ளான்.

கேரளா, பனூரில் 23 வயதான விஷ்ணுபிரியா என்ற 23 வயதான யுவதி நேற்று கழுத்தறுத்து கொல்லப்பட்டிருந்தார்.

விஷ்ணுபிரியாவின் முன்னாள் காதலனான  ஷியாம்ஜித் (25) என்பவனே கொலையை செய்தது தெரிய வந்தது. நேற்றே அவன் கைதாகினான். பொலிஸ் விசாரணையில் கொலையை செய்ததை ஏற்றுக்கொண்டான்.

விஷ்ணுபிரியாவை கொன்றுவிட்டு, அவரது தற்போதைய ஆண் நண்பரையும் கொல்ல திட்டமிட்டிருந்ததாக அவன் விசாரணையில் தெரிவித்துள்ளான்.

விஷ்ணுபிரியாவின் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு சென்று, ஆண் நண்பனிடம் காண்பித்து விட்டு, அவரை கொல்ல திட்டமிட்டிருந்தான்.

இரட்டைக் கொலை செய்யும் நோக்கத்துடன், ஷியாம்ஜித் பல நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளான். கழுத்தை அறுக்கும் நோக்கத்துடன் ஒரு சிறிய மரம் வெட்டும் இயந்திரத்தை வாங்கியுள்ளான். ஆனால் கடைசி நேரத்தில் அதன் பிளேடு வேலை செய்யவில்லை.

பின்னர் ஒரு சிறிய இரும்பு உளியை வாங்கி, அதை விஷ்ணுபிரியாவின் கழுத்தில் குத்தி, கத்தியால் கழுத்தை அறுத்தார். இருப்பினும், விஷ்ணுபிரியாவின் கழுத்தை அவரால் பிரிக்க முடியவில்லை, அதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினான்.

விஷ்ணுபிரியாவும், அவனும் 5 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்தனர். 3 மாதங்களின் முன்னர் விஷ்ணுபிரியா அந்த உறவை துண்டித்துள்ளார். காதலை தொடர விரும்பவில்லையென தெரிவித்தார். எனினும், ஷியாம்ஜித்தால் அதை ஏற்க முடியவில்லை.

பின்னர் விஷ்ணுபிரியா வேறொரு ஆண் நண்பருடன் உறவில் இருப்பதாகவும், அதனாலேயே தன்னுடனான உறவை முறித்ததாகவும் ஷியாம்ஜித் நம்பினான்.

விஷ்ணுபிரியாவை கொல்ல வேண்டுமென பல நாட்கள் திட்டமிட்டு, கொலையை நிறைவேற்ற 3 நாட்களாக அந்த பகுதியை நோட்டமிட்டு வந்துள்ளான். கொலைக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை கூகிளில் தேடிப்பார்த்துமுள்ளான்.

விஷ்ணுபிரியாவின் அத்தையொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அருகிலுள்ள அவரது வீட்டில் மரணச்சடங்கில் அனைவரும் தங்கியிருந்தனர். நேற்று பகல் உடைமாற்ற விஷ்ணுபிரியா தனது வீட்டிற்கு சென்றதை அவதானித்த ஷியாம்ஜித், விஷ்ணுபிரியாவின் வீட்டிற்குள் நுழைந்தான்.

சமையலறைக்குள் விஷ்ணுபிரியா இருப்பார் என நினைத்து சென்றான். அவர் அங்கிருக்கவில்லை. படுக்கையறைக்கு வந்தான்.

அப்போது தனது ஆண் நண்பருடன் வட்ஸ்அப் வீடியோ கோலில் விஷ்ணுபிரியா பேசிக் கொண்டிருந்தார்.

ஷியாம்ஜித்தை பார்த்து அச்சமடைந்து எழுந்துள்ளார். அப்போது ஷியாம்ஜித்தின் பெயரையும் உச்சரித்துள்ளார். பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

விஷ்ணுபிரியாவின் தலையில் சுத்தியலால் அடித்து விழுத்து விட்டு, கொலை நடந்துள்ளது.

விஷ்ணுபிரியா கொலை செய்யப்பட்டதும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், அவரத கையடக்க தொலைபேசியை ஆய்வுசெய்ததில், அவர் கடைசியாக வட்ஸ்அப்பில் பேசியதை கண்டறிந்தனர். அந்த ஆண் நண்பரை பொலிசார் அணுகிய போது, அழைப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர் ஷியாம்ஜித்தின் பெயரை கூறி அலறியதாக தெரிவித்தார்.

இதன்மூலமே கொலையாளி உடனடியாக கைதாகினான்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, விஷ்ணுபிரியாவின் கழுத்தில் இருந்த நரம்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. அவரது கால்கள், கைகள் மற்றும் மார்பில் ஆழமான காயங்கள் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையின் பின்னர், மானந்தேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து, குளித்து உடை மாற்றி, இரண்டாவது கொலைக்காக ஆயுதங்களை கழுவியுள்ளான். ஆயுதங்கள், கொலையின் போது அணிந்திருந்த ஆடைகளை பையில் வைத்து, குளத்திற்குள் வைத்து அதன் மேல் கல்லை வைத்துள்ளான்.

பின்னர் வீட்டை அடைந்த அவர், குளித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு நேராக மானந்தேரியில் உள்ள தனது தந்தையின் கடைக்கு சென்றார். வழக்கம் போல அங்கு உணவு பரிமாறுவதில் ஈடுபட்டான்.

விஷ்ணுபிரியாவின் கடைசி அழைப்பிலிருந்தவரின் தகவலின் அடிப்படையில், கொலையாளியை அடையாளம் கண்ட பொலிசார், விஷ்ணுபிரியாவின் தொலைபேசியிலிருந்து அவனது இலக்கத்தை பெற்றனர். அதன்மூலம் கொலையாளியின் இருப்பிடத்தை அறிந்த பொலிசார், அவனை  கைது செய்தனர்.

அவன் அழைத்து வரப்பட்டு, குளத்தில் வைத்த பை மீட்கப்பட்டது. அதிலிருந்த சுத்தியல், கத்தி, ஸ்க்ரூ டிரைவர், கொலை நடந்த அன்று அணிந்திருந்த முகமூடி, சட்டை, ஜீன்ஸ், கையுறை, தொப்பி, காலணிகள், மிளகாய் தூள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மிளகாய் பொடியை தான் பயன்படுத்தவில்லை என ஷியாம்ஜித் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

ஆதாரங்களை சேகரிக்க வீட்டுப்பகுதிக்கு ஷியாம்ஜித் அழைத்து வரப்பட்ட போது, மிக சாதாரணமாக, சிரித்தபடி தோன்றினார். கொலையை செய்ததில் எந்த வருத்தமும், பதற்றமும் இல்லாமல் ஷியாம்ஜித் போலீசாரிடம் விஷயங்களை விளக்கினான். ஊடகவியலாளர்களை பார்த்து சிரித்துக்கொண்டே போலீசாருடன் சென்றான்.

பொலிசாரின. அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித பதட்டமும், பயமும் இல்லாமல் பதிலளித்தான். பின்னர் அவனது வீட்டிற்கு அழைத்து சென்று சாட்சியங்களை சேகரித்தனர்.

பொலிசாரின் விசாரணையின் போது, காதலித்து ஏமாற்றும் பெண்களிற்கு இவ்வாறான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், கொலையை செய்ய முன்னர், கொலைக்கு என்ன தண்டனை கிடைக்குமென கூகிளில் தேடிப் பார்த்ததாகவும், 14 ஆண்டுகள் தண்டனை கிடைக்குமென தெரிந்து கொண்டதாகவும், தனக்கு தற்போது 25 வயதாகிறது என்றும், 14 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு, 39 வயதாகும் போது விடுதலை செய்யப்பட்டு விடுவேன்  என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தான்.

விஷ்ணுபிரியாவின் உடல் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment