26.3 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் வாகன விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!

இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன.

இந்த நிலையில், தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிக வட்டி விகிதங்கள், பணவீக்கத்தின் உயர்ந்த அளவுகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணிகள் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் விலைகளை குறைக்க உதவியுள்ளன.

கடந்த மாதம் ரூ.9 மில்லியனாக இருந்த Honda Vezel 2015 மொடல் இந்த மாதம் ரூ.7.5 மில்லியனாக விற்பனையானது. ரூ.7.2 மில்லியனாக இருந்த 2017 டொயோட்டா விட்ஸ் ரூ.6.5 மில்லியனாக குறைந்துள்ளது. 2008 டொயோட்டா அலியன் கிட்டத்தட்ட ரூ. 7.5 மில்லியனுக்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ.6 மில்லியனாக உள்ளது.

2020 மார்ச் மாதம் வாகன இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இறக்குமதி தடையை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களின் விலைகள் 2 மடங்கை விட அதிகரித்திருந்தன.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவிகளை வழங்கிய பின்னர் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறக்குமதிகள் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment