26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் விபத்தில் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மூன்று மாதங்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

யாழ்ப்பாணம்- பலாலி பிரதான வீதியில் ஊரெழு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர்.

வலியபுலம் சுண்ணாகம் பகுதியை சேர்ந்த, கோணேஸ்வரன் ஹரி பிரணவன் (29) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் தலைமை பீட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 13ஆம் திகதி, கடமை முடிந்து இவர் வீடு சென்று கொண்டிருந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர் முன்னே சென்ற தூவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தார்.

சம்பவ இடத்தில் இவர் மயக்கமுற்ற நிலையில் வீதியால் சென்றவர்களினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த மூன்று மாதங்களாக போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடிர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment