27.6 C
Jaffna
March 28, 2024
மலையகம்

வடிகானில் வீசப்பட்ட சிசு உயிருடன் மீட்பு: திருமணமாகாத 21வயது யுவதி சிக்கினார்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியூடாக சென்ற சிலர் சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். பின்னர் சிசு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த சிசு உயிருடன் இருப்பதாக வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிசுவை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய தாய் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமணமாகாத 21 வயதுடைய பெண் ஆவார். இவர் வட்ட கொடை கீழ் பிரிவை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் சிகிச்சைகளுக்காக அவரை தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொட்டக்கலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி சுதர்சன் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment