யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் வீடொன்றில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து, மேற்கொளளப்பட்ட அகழ்வுப்பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த யூன் மாதம் 10ஆம் திகதி இருபாலை டச்சு வீதியில் வீடொன்றிற்குள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
முன்னாள் இராணுவச்சிப்பாய், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர், முன்னாள் போராளி ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அங்கு தங்கம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, நீதிமன்ற உத்தரவின்படி இன்று அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், இன்றைய அகழ்வுப் பணியில் எந்தவிதமான பொருட்களும் மீட்கப்படவில்லை. இதையடுத்து தற்காலிகமாக அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.