30.9 C
Jaffna
April 19, 2024
இலங்கை

திருடர்களிற்கு பயந்து வீட்டு கதவிற்கு மின் இணைப்பை ஏற்படுத்தியவர் மறந்து தொட்டதால் உயிரிழந்தார்: தமிழகத்திற்கு அகதியாக சென்ற தமிழர் மரணம்!

மண்டபம் அகதிகள் முகாமில் வீட்டில் திருடர்கள் நுழையாமலிருப்பதற்காக வீட்டின் கதவில் வைத்திருந்த மின் இணைப்பை வீட்டின் உரிமையாளரே தொட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(2) காலை இடம்பெற்றுள்ளது.

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ராமலிங்கம் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராமலிங்கத்தின் வீடு தனியாக இருந்து வருவதால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை திருடர்கள் யாரும் திருடி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர் வெளியே செல்லும் போதெல்லாம் வீட்டின் கதவில் சுவிட்ச் போர்ட்டு மூலம் மின் இணைப்பு வைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் கதவில் மின் இணைப்பு வைத்திருந்ததை மறந்து மின் இணைப்பு வைத்த ராமலிங்கமே அவரது வீட்டின் கதவை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்டபம் போலீசார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திருடர்களுக்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் அவரை சிக்கி உயிரிழந்த சம்பவம் மண்டபம் முகாம் பகுதி உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது:

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

அழகால் வலைவீசி உக்ரைன் போருக்கு இழுக்கப்பட்ட இலங்கையர்கள்!

Pagetamil

கோட்டாவின் வாகனம் மொடல் அழகிக்கு கிடைத்தது எப்படி?

Pagetamil

சுற்றுலா பயணிக்கு ரூ.800க்கு உளுந்து வடை விற்றவர் கைது!

Pagetamil

கணவனின் மரண செய்தியை அறிந்ததும் மனைவி தற்கொலை: நடுத்தெருவில் பிள்ளைகள்!

Pagetamil

Leave a Comment