26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

புலிகள் பயன்படுத்திய எரிபொருள் கொள்கலன் அகழ்ந்தெடுக்கப்பட்டது!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10ஆம் வட்டார பகுதியிலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் பயன்பாட்டிலிருந்த நிலக்கீழ் எரிபொருள் கொள்கலன் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காணிக்குள் எரிபொருள் கொள்கலன் புதைத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, நேற்று (31) அகழ்ந்து எடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, பொலிசார், இராணுவத்தினர், கிராமசேவையாளர் முன்னிலையில் நேற்று காலை அகழ்வுப்பணி நடந்தது. கனரக வாகனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில், 16.3 அடி நீளமும், 7.9 அடி விட்டமும் உடைய இரும்பு கொள்கலன் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

கொள்கலனிற்குள் எரிபொருள் இருக்கவில்லை. அது இரண்டு இடங்களில் வெட்டப்பட்டிருந்தது. அதனுள் மண்ணெண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாமென, வாசனையின் மூலம் ஊகிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கடைய கொள்கலன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment