வவுனியா புதுக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தேரின் வடத்தினை பிடித்து இழுத்துச்சென்றிருந்ததுடன், காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேத்திக்கடனை செலுத்தியிருந்தனர்.
மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று தேர்த் திருவிழாவினை மகோற்சவ பிரதம குரு சிவசிறி மயூரக் குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1