Pagetamil
பிரதான செய்திகள்

6 தமிழ் அமைப்புக்கள், 316 நபர்கள் மீதான தடை நீக்கம்!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றினதும், தனிநபர்கள் சிலரினதும் தடைகளை நீக்குவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான விசேட வர்த்தமானியை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இந்தத் தடை விதிக்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளின் 4(7) கட்டளையின்படி இது நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் 316 தனிநபர்கள் மீது இலங்கை அரசு விதித்திருந்த தடை நீக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு – திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு – கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்படும்.

அதற்கான வர்த்தமானியை காண இங்கு அழுத்துங்கள்.

இதையும் படியுங்கள்

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 28

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 27

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 26

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 25

Pagetamil

வரலாற்றில் இன்று – பெப்ரவரி 24

Pagetamil

Leave a Comment