Pagetamil
இலங்கை

ஹரக் கட்டா கைது!

தேடப்படும் பாதாள உலகக் குற்றவாளிக் கும்பலின் தலைவன் ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஹரக் கட்ட என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையின் விளைவாக கடந்த 11ஆம் திகதி டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் நாட்டை விட்டு டுபாய்க்கு தப்பிச் சென்ற போது பயன்படுத்திய போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டாவின் முகத்துடன் இறந்த நபரின் தகவலைப் பயன்படுத்தி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் ஹரக் கட்டாவின் வழிநடத்தலில் நடந்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment