யாழ்ப்பாணம் கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபரிகள் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை இடம்பெறுவதால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தே பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என் மரக்கறி வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறி விற்பனை செய்யப்படுவதால் மரக்கறி வியாபாரத்தை மட்டும் நம்பியிருக்கும் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1