நுகேகொடையில் இன்று (6) பிற்பகல் 3 மணிக்கு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை ஒடுக்குதல், அவசரகால நிலை மற்றும் பல காரணிகளுக்கு எதிராக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், சிவில் அமைப்புகள் மற்றும் பல குழுக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் தொழிற்சங்கவாதி ஜோசப் ஸ்டாலின் உட்பட கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என யாழ்வல பஞ்ஞசேகர தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் போராட்டக்காரர்களை விடுவிக்காவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் லிப்டன் சுற்றுவட்டத்தில் போராட்டம் நடத்தப்படும் என தேரர் தெரிவித்தார்.