காலா படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நானா படேகர் மீது, பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டி இருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
‘தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நானா படேகர் தான் காரணம்’ என்று தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது-
எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு நானா படேகர் மற்றும் அவரது வழக்கறிஞர், அவரது உதவியாளர்கள் மற்றும் அவருடைய பாலிவுட் மாபியா கும்பல் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பாலிவுட் மாபியா என்றால் யாரென்று நீங்கள் கேட்கலாம். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின்போது யாருடைய பெயரெல்லாம் தொடர்ச்சியாக பேசப்பட்டதோ, அவர்கள்தான் பாலிவுட் மாபியாக்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு கிரிமினல் வழக்கறிஞர் தான் உதவி செய்கிறார்.
அவருடைய படங்களை பார்க்காதீர்கள். முற்றிலுமாக ரசிகர்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும். எனக்கு எதிராக பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன.
என்னை அவமானப் படுத்தும் நோக்கத்தில் குறிவைத்து எனக்கு எதிராக சதி நடக்கிறது. என்னை அவர்கள் கடுமையாக துன்புறுத்தி உள்ளார்கள். சட்டமும், நீதியும் என்னைக் காப்பாற்றவில்லை. ஆனால் இந்திய நாட்டு மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது ‘ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார். தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டும் அவரது சமூக வலைதள பதிவு இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தன்னை சிலர் துன்புறுத்தியாக தனுஸ்ரீ தத்தா கடந்த சில நாட்களாக கூறி வருகிறார். இந்நிலையில் நானா படேகர் மீது வெளிப்படையாக புகார் கூறியுள்ளார்.