29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஒவ்வொரு வாக்கெடுப்பின் போதும் கூட்டமைப்பு பணம் வாங்கியதாக கூறுவது வழக்கம்; ரூ.40 கோடி பெறுமதியான காணியை நானே கல்வியல் கல்லூரிக்கு வழங்கினேன்: த.சித்தார்த்தன் எம்.பி

மார்ச் மாதத்துக்குப் பிறகாவது நாடாளுமன்ற தேர்தலொன்று நடத்தப்பட்டு புதிய ஆணையை எடுப்பதே சிறப்பானது என புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலொன்று தற்போது நடத்தப்படுமானால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசு என்கிற அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை காண முடியும். ஆனால் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.

புதிய அரசாங்கம் புதிய ஆணையைப் பெறுகின்றபோது சர்வதேச ரீதியாக அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெறும். எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வருகின்ற கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை புதிய தேர்தலொன்று நடத்தப்படுவதையே நாம் விரும்புகின்றோம். அதிலே சில நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைப்பது என்றால் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னரே அது முடியும். நாடாளுமன்றம் அல்லது முடிவை எடுக்க வேண்டும். அதற்கான பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெரியவில்லை.

நாடாளுமன்றத்தை கலைக்க பொது ஜன பெரமுன என்ன செய்வார்கள் என்று கேள்வி காணப்படுகின்றது. தனிய எதிர்கட்சிகள் மாத்திரம் நாடாளுமன்றை கலைக்க கோரிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மார்ச் மாதத்துக்குப் பிறகாவது ஒரு தேர்தல் வந்து புதிய ஆணையை எடுப்பது சிறப்பானது என்றார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடகபேச்சாளராக இருந்து கொண்டு சுமந்தினுடைய சில கருத்துக்கள் கூட்டமைப்பை உடைப்பதாக மக்கள் மத்தியில் ஒருகருத்து காணப்படுகின்றது. இது தொடர்பாக தங்களுடைய கருத்து என்னவென்று கேள்வியெழுப்பிய பொழுது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய ஊடகப் பேச்சாளராக சுமந்திரன் கடந்த கால அரசாங்கத்திலேயே காணப்பட்டார். இம்முறை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற பின்பு இருவருடைய பெயர்கள் ஊடகப் பேச்சாளருக்காக பிரேரிக்கப்பட்டது. ஒருவர் ஸ்ரீதரன். மற்றவர் அடைக்கலநாதன். சிறீதரனுக்கு 5 வாக்குகள் கிடைத்தது. செல்வத்திற்கு 4 வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அடைக்கலநாதனுக்கு வாக்களிப்பதாக தெரிவித்த நிலையில் 5-5 என்று வாக்கு சமபட்ட நிலையில், தானொரு முடிவு எடுத்து பின்னர் அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இன்று வரை எதுவித பதில்களும் அளிக்கப்படவில்லை. ஆகவே இந்த காலகட்டத்தில் எங்களுடைய 10 உறுப்பினர்களுமே தங்களுடைய கருத்தை வெளிப்படுத்துகின்ற பேச்சாளர்களாக காணப்படுகின்றார்கள். மேலும் சுமந்திரன் சில விடயங்களை ஆர்வக்கோளாறில் செய்து கொண்டு வருகின்றார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது . ஒரு கட்சியில் இருந்து கொண்டு மத்திய கட்சியை பற்றி கதைக்காது தொடர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயமான விடயமாக காணப்டுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நான் ரணில் விக்கிரமசிங்கவிடம்  இருந்து ஏறக்குறைய ஒரு ஆறு கோடி ரூபா பெறுமதியான பணத்தை பெற்று விட்டதாகவும் அதன் பெறுமதி  சரியாக சொல்லப்படவில்லை ஒரு செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது .

நாங்கள் பொதுவாக யாருமே கட்சி எடுத்த முடிவுக்கு மாறாக வாக்களித்ததாக நம்பவில்லை. ஏனென்றால் வேறொருவருடைய கருத்தை நாங்கள் கேட்கவும் இல்லை. கட்சி எடுத்த முடிவிற்கு நாங்கள் என்றும் மாறாக வாக்களிக்கவுமில்லை. இரண்டாவதாக எங்களுக்குரிய ஆறரை கோடி வழங்கியது என்று சொன்னால், எமது குடும்பம் தேசிய  கல்வியியல் கல்லூரிக்காக கொடுத்த காணி  வழங்கப்படுகின்ற பொழுது ஏறக்குறைய அந்த நேரத்தில் முப்பது நாற்பது கோடி விலை மதிப்பாக இருந்தது .இன்று அதனுடைய மதிப்பு பெருகி  காணப்படுகிறது.

எனக்கு பணம் தேவையென்றால்  அதை விற்றிருந்தால் நான் எவ்வளவோ பணத்தை எடுத்திருக்கலாம். ஆகவே  அதனை நான் விற்கவில்லை.

மேலும் ஸ்கந்தவரோதயா கல்லூரி, சுப்பிரமணியம் பூங்கா என பல கொடைகளையும் எனது தந்தை ஆற்றி இருக்கின்றார்.

அது மாத்திரமல்ல கடந்த காலங்களில் இப்படியான தேர்தல்கள், நம்பிக்கை தீர்மானங்கள் எல்லாம் வருகின்ற பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கின்ற பொழுது இப்படியான கதைகள் வருவது மிக அதிகமாக இருக்கின்றது. முக்கியமாக கடந்த அரசாங்கத்திலே ரணில் விக்கிரமசிங்க பதவி விலக்கப்பட்டு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கிய பின்பு மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரனை மகிந்த மீது  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட போது 40, 50 கோடி ரூபாய் கூட்டமைப்பு தலைமைக்கு கொடுக்கப்பட்டதாகவும் தமிழரசு கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கு மாத்திரம், மற்றவர்களுக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  என்னை பொறுத்தவரை அவற்றையெல்லாம் நம்பவில்லை ஆனால் கொடுக்கப்பட்டதாக கதைத்திருக்கின்றார்கள் .அதனுடைய உண்மை தன்மையை அவர்களுக்கு தான் தெரியும். இன்று கூட இப்படியான கதைகள் வருவதற்குரிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நலிவு படுத்துவதற்குரிய செயற்பாடுகளே காணப்படுகிறது.

இதில் துக்ககரமான கருத்து காரணம் என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சேறு பூசுவதன் மூலம் அடுத்த தேர்தலில் எங்களை விட கூடுதலான விருப்பு வாக்கை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தவறு. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குகள் இல்லாது போகலாம். இங்கு எமது கட்சி முக்கியம். பல கட்சிகள் கடந்த காலத்தில் போயிருக்கின்றன வந்திருக்கினற்ன. ஆனால் இன்று ஒரு மிகப் பலம் பொருந்திய கட்சியாக காணப்படுகின்ற  இந்த கட்சியை உடைப்பதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்கள் அவர்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் உடைப்பதற்கான காரணமாக அமையும். இது சிங்கள தேசியத்திற்கு பேரினவாதிகளுக்கு உதவி செய்வதாகவே நான் பார்க்கிறேன்.

இன்னொரு விஷயம் நிச்சயமாக என்னை பொறுத்தவரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எப்பொழுதும் எவரிடமோ பணம் பெற்று நான் வேலை செய்வதில்லை. நான் மாற்றாக ஒரு நன்மை செய்யப்போகிறேன் என்று பணம் பெற்றதுமில்லை என்னை பொறுத்தவரை நான் என்னை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். எங்களுடைய கடந்த காலங்களை பார்க்கின்ற பொழுது யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் தெரியும்  நாங்கள் எப்படி செயல்பட்டு இருக்கின்றோம் என்று. ஆகவே நான் சொல்ல தேவையில்லை ஆனால் இவ்வாறான வதந்திகள் வருகின்ற  பொழுது நான் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன தூதுவரை  ஜனாதிபதி தேர்தலிற்கு முன்பு சந்தித்தமை தொடர்பாக தங்களுடைய கருத்து என்ன வென்று கேட்டபொழுது-

தூதரகங்களோடு உரையாடுவது தவறில்ல்லை. கலந்துரையாடல் செல்லும் பொழுதும் என்னிடம் கூறவில்லை. சந்தித்த பின்பும் என்னுடன் கலந்துரையாடவில்லை. ஜனாதிபதி தேர்தல் நெருங்கி இருந்த பொழுது  சுமந்திரன் இரண்டு நாட்களின் முன்பு சீன தூதுவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஒரு தூதுவரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சந்திப்பது தவறில்லை. ஆனால் மர்மம் நிறைந்ததாக சந்திப்புகள் இடம் பெறுவது பல்வேறு கேள்விகளை குறித்த ஜனாதிபதி தேர்தல் மீதான வாக்கெடுப்பு காலத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஐயத்தை உண்டாக்கியுள்ளது .ஆகவே காலம் நேரத்தை கருத்திற் கொண்டு செயற்படவேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment