பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரே ஜூன் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் 6 செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர மற்றும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆகியோருக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1