25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ரணில் பதவியேற்ற போது மின் தடை; நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்: சி.ஐ.டியிடம் விசாரணை ஒப்படைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

அரச தொலைக்காட்சியான சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பு (ஐடிஎன்) நேரலையாகவும், அதன் மூலம் மற்ற தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவை நேரலையில் ஒளிபரப்ப அரசு தொலைக்காட்சியால் முடியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment