ஜனாதிபதித் தேர்தலுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பன டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானித்திருந்தாலும், அந்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளார்கள்” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் சர்வகட்சி ஆட்சியை அமைப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1