29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

தமிழ் தரப்பின் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த ரணில்!

தமிழ் தரப்பினால் முன் வைக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்ற தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

6 தமிழ் கட்சிகள் கூட்டாக தயாரித்த ஆவணத்தை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய போதே இதனை தெரிவித்தார்.

ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலையில் ரணிலை சந்தித்து இந்த ஆவணத்தை கையளித்தனர்.

ஆவணத்தை பார்வையிட்ட ரணில், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்றார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டியவை, உயர்நீதிமன்றத்தில் கருத்து கேட்க வேண்டியவை சற்று தாதமானாலும், ஏனைய விடயங்களை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றார்.

இந்த விடயங்கள் தொடர்பில் க.வி.விக்னேஸ்வரனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரணில் விக்கிரமசிங்க பேசினார்.

இதன்போது, வடக்கு கிழக்கிற்கான நிதியம் அமைப்பதில் உயர்நீதிமன்ற தடைகள் ஏற்படலாம் என்பதால், மாகாணசபைகளின் ஊடாக செயற்படுத்தும் நிதியம் ஒன்றை ஆரம்பித்து தருவதாக ரணில் குறிப்பிட்டார்.

எனினும், அது எப்பொழுதும் இல்லாமல் செய்யப்படலாம் என்பதை சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், அந்த யோசனையை நிராகரித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ் தேசிய கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகள்!

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment