1,000 இற்கும் குறைவான பஸ்களே இன்று சேவையில் ஈடுபடும்!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் இன்று (4) முதல் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினால் தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்ததாக தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பிராந்திய டிப்போக்கள் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிராகரித்து கட்டுப்படுத்துவதாக தெரிவித்தார்.

பேருந்துகள் மட்டுமே பொதுமக்களின் மாற்றுப் போக்குவரத்து முறையாகும் என்றும், போக்குவரத்து வசதியின்றி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தனியார் பேருந்துகளும் எரிபொருள் வரிசையில் நிற்கின்றன. இன்று 1,000 பேருந்துகள் கூட இயங்காது என்றார்.

எனினும், இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறுகிறது.

இதேவேளை, அனைத்து ரயில்களையும் இயக்குவதற்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், புகையிரத ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களில் கடமைக்குச் செல்வதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகள் மேலும் தடைபடலாம் என நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யுரேனியத்தை ஏற்கெனவே நகர்த்தி விட்டோம்; அமெரிக்க தாக்குதலால் எந்த பாதிப்புமில்லை: ஈரான்!

ஃபோர்டோ மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு உள்ளூர்வாசிகள் "பெரிய வெடிப்புக்கான எந்த...

அமைதி வராவிட்டால் கடந்த 8 நாட்களை விட பெரிய சோகத்தை ஈரான் அனுபவிக்கும்: ட்ரம்ப் மிரட்டல்!

ஈரானின் "அணுசக்தி செறிவூட்டல் திறனை நிறுத்துவதும், உலகின் முதன்மையான பயங்கரவாத ஆதரவு...

ஈரானின் முதன்மையான 3 அணுசக்தி தளங்களையும் தாக்கியது அமெரிக்க விமானங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை இரவு அமெரிக்கப் படைகள் ஈரானில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்