25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

5 நாட்களில் இலங்கையில் விமான எரிபொருட்களும் காலியாகி விடும்!

இலங்கையின் விமான எரிபொருள் கையிருப்பு மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் வரையாவது எரிபொருளை நிர்வகிக்க போராடுவதாகக் கூறியுள்ளது.

விமான எரிபொருள் கையிருப்புகளை அவசரமாக நிரப்பவில்லை என்றால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விமான பறப்புக்கள் கணிசமான அளவு குறையும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையக பணிப்பாளர் நாயகம் கப்டன் தெமியா அபேவிக்ரம நேற்று தெரிவித்த போது,

“விமான எரிபொருள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  அதைத் தீர்க்கும் முயற்சியில் அமைச்சு ஈடுபட்டுள்ளது. நாங்கள் எப்போது இயங்க முடியும் என்று நாங்கள் கணக்கிட்டு வருகிறோம், மாத இறுதி வரை நிர்வகிக்க முடியும் என்று நம்புகிறோம். அதாவது இன்னும் ஐந்து நாட்கள்“ என்றார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் விமான எரிபொருளைக் கோரியுள்ளது, ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எதுவும் இல்லை. போக்குவரத்து, மின் உற்பத்திக்கு போதுமான எரிபொருளை வழங்குவதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது சிரமங்களை சந்தித்து வருகிறது.

இந்த வாரம் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விமான நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒரு வார கையிருப்பு மட்டுமே உள்ளது என்றும் மேலும் கொள்முதல் செய்யும் நிலையில் இல்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. மூன்றாம் தரப்பினர் மூலம் விமான எரிபொருள் சிக்கலை நிர்வகிப்பது பற்றி அமைச்சு ஆலோசித்து வருவதாகவும் அவர்களிடம் கூறப்பட்டது.

செவ்வாய்கிழமை முதல், கொழும்பில் இருந்து எந்த விமான நிறுவனமும் எரிபொருளை நிரப்ப முடியாது. பயணத்திலிருந்து திரும்பும் போது எரிபொருளை நிரப்பிக் கொண்டு வர வேண்டும்.

சர்வதேச விமான நிறுவனங்கள் கொழும்பு பயணம் மேற்கொள்ளும் போது, கூடுதல் எரிபொருளை ஏற்றிச் செல்லும்படி கடந்த மே மாதத்தில்  இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கேட்டிருந்தது.

அந்த சமயத்திலிருந்து, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், தென்னிந்தியாவின் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் ஒரு மாதமாக எரிபொருள் நிரப்பி வருகிறது.

சர்வதேச விமான சேவைகள் தங்கள் சொந்த எரிபொருளையும் இலங்கையில் உள்ள பங்குகளையும் கொண்டு வந்ததன் மூலம் நிலைமை நிர்வகிக்கப்பட்டது. ஆனால் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிடும் அபாயத்தில் இருப்பதால், விமான நிறுவனங்கள் திரும்பும் பயணங்களுக்கு போதுமான எரிபொருளை உறுதி செய்து கொள்ள வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறிப்பாக நீண்ட தூர விமானங்களை பாதிக்கும். அவை சேவையின் எண்ணிக்கை, சரக்கு மற்றும் பயணிகளின் சுமைகளை குறைக்க கட்டாயப்படுத்தும் என்று விமானத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment