எரிபொருளைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் வரிசையில் நிற்கும் இளைஞன் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். இதை அறிந்த வரிசையிலிருந்த ஏனையவர்வள் ஒன்றுதிரண்டு, வரிசையிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (21)இந்த சம்பவம் நடந்தது.
பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வரிசையில் நின்ற இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் இருந்து கேக்கை எடுத்து வந்து பிறந்தநாள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் கொண்டாடும் இளைஞன் இன்றும் வீடு செல்லாமல் வரிசையில் இருக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1