இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேர்மறையான தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கன் ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
“பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சவாலான காலங்களில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது” என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ருவிற்றரில் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1