26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் வாழைத்தோட்டத்திற்குள் இளைஞனின் சடலம்: போதை ஊசி ஏற்றினாரா?

யாழ்ப்பாணம், உரும்பிராயில் வாழைத்தோட்டத்திற்குள்ளிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் கிழக்கு, சிவன் வீதியிலுள்ள வாழைத் தோட்டத்திற்குள்ளிருந்து நேற்று (12) இரவு சடலம் மீட்கப்பட்டது.

வாழைத்தோட்டத்திற்குள் ஒருவர் நினைவிழந்திருப்பதாக பிரதேசவாசிகள் கோப்பாய் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றனர்.

எனினும், அங்கிருந்த நபர் உயிரிழந்து காணப்பட்டார்.

இணுவில் வடக்கை சேர்ந்த துரைராசா உசாந்தன் (36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் போதை ஊசி ஏற்றியதால் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அவருடன் தங்கியிருந்த 4 இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment