விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் சேகரிப்பதில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மோசமான திறனை வெளிப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் கப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்கவுடனான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இதனை தெரிவித்தார்.
விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடி ஓட்டங்களைப் பெறுவதிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு பொறுப்பு உள்ளது. கூடுதல் ஓட்டங்களை பெறாததே விசேடமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.
துடுப்பெடுத்தாடும்போது விரைவாக முதல் ஓட்டத்தை எடுப்பதே ஒரு அடிப்படை. இலங்கை அணி அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.
அவுஸ்திரேலியா போன்ற அணிகளை தோற்கடிப்பதற்கு அவ்வாறாக ஓட்டங்களை அதிகரிப்ப முக்கியம் என சனத் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1