அரசாங்கத்தின் பிரதம கொறடா குற்றவாளி என உயர் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டால் தாம் அவருடன் அமரப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், எதிர்க்கட்சி பிரதம கொறடா நீதிமன்றத்தினால் கடுமையான குற்றச்சாட்டிற்கு உள்ளானவர் எனவும், மிஸ்டர் க்ளீன் இவ்வளவு கேவலமான அமைப்பாளருடன் இருக்க முடியுமா எனவும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரணில்,
“கொழும்பு உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இரண்டு முறை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல அவருக்கு உரிமை உண்டு. அவர் குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் கண்டறிந்தால் அவருடன் நான் உட்கார மாட்டேன். அப்படி தீர்ப்பளிக்கப்பட்டால் அவரால் இங்கு உட்கார முடியாது. ஆனால் அப்படி ஒரு முடிவு வரும் வரை நான் இங்கேயே இருப்பேன். பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை நாங்கள் காத்திருந்தோம்” என தெரிவித்துள்ளார்.