யாழ்ப்பாணம், அரியாலையில் புகையிரதம் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் புகையிரதத்தை வழிமறித்து வைத்துள்ளனர்.
அரியாலை, நாவலடி பகுதியில் இன்று (30) மதியம் இந்த சம்பவம் நடந்தது.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற இளைஞனை புகையிரதம் மோதித்தள்ளியது.
தற்போது வீசும் கடுமையான காற்று காரணமாக புகையிரதம் வரும் சத்தம் இளைஞனிற்கு கேட்காமல் விட்டிருக்கும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த மரியசீலன் அரவிந்தன் (28) என்ற இளைஞனே உயிரிழந்தார்.
விபத்தையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் புகையிரதம் தொடர்ந்து பயணிக்க முடியாமல் தடையேற்படுத்தியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
1
+1