ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சி இதுவரை கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் கட்சியின் மத்திய குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கும் தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“ஒழுங்கு விசாரணை தேவையோ, அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. கட்சியின் தலைவருக்கு நமது முக்கியத்துவம் தெரியும். அவருக்கு ஒரு புரிதல் உள்ளது. அவர் இந்த கட்சியை உடைக்க முயற்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை.” என்றார்.