29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

சுகவில் பலர் இராஜாங்க அமைச்சு பொறுப்பேற்பார்கள்; மைத்திரிக்கு நமது முக்கியத்துவம் தெரியும்: அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சி இதுவரை கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் கட்சியின் மத்திய குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கும் தயாராகி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“ஒழுங்கு விசாரணை தேவையோ, அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. கட்சியின் தலைவருக்கு நமது முக்கியத்துவம் தெரியும். அவருக்கு ஒரு புரிதல் உள்ளது. அவர் இந்த கட்சியை உடைக்க முயற்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை.” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment