32.3 C
Jaffna
April 28, 2024
குற்றம்

பெற்றோல் வரிசையில் பற்றிய காதல்: எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருடன் மனைவி ஓட்டம்!

கணவனின் ​ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு சென்று வந்த அவருடைய மனைவி, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருடன் ஓடிச் சென்றுள்ளார்.

தென் மாகாணத்தி​ன் பகுதியொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து, சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்தியின்படி,

புது ஜோடியான அவ்விருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கணவன் வேலைக்குச் சென்றவுடன் வீட்டு வேலைகளை மனைவி கவனித்து வந்துள்ளார். இருவரும் முன்னர் ஆடைத்தொழிற்சாலையில் வேலைச் செய்துவந்துள்ளனர். மனைவி பேரழகி. பல இளைஞர்கள் அவரை வட்டமிட்டனர். தற்போதைய கணவர், காதலித்து திருமணம்  செய்துகொண்டுள்ளனர்.

கணவனிடத்தில் எவ்விதமான கெட்ட, பழக்கவழக்கங்களும் இல்லை.

இருவரும் ஸ்கூட்டியில் பயணிக்கும் போது, ஸ்கூட்டியை அப்பெண்ணே, செலுத்திச்செல்வார். கணவன் பின்னால் அமர்ந்திருந்து பயணிப்பார்.

வேலைக்குச் செல்லும் கணவனை, ​மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வரும் அப்பெண், வீட்டு​ வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலை வேளையில் பஸ் நிலையம் சென்று கணவனை அழைத்து வருவாள்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்கூட்டிக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது.

எரிபொருளை நிரப்பும் போது, ஏ​தோவொன்றை கூறிய அப்பெண், எரிபொருள் நிரப்புவரை தன் வலைக்குள் விழச்செய்தார். அதனைத்தொடர்ந்து, தொலைபேசி இலக்கங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

குறுஞ்செய்திகளை பகிர்ந்துகொண்ட இவ்விருவரும், காதல் வலைக்குள் விழுந்துவிட்டனர். இரண்டொருநாள் கடந்த நிலையில், பஸ்நிலையத்துக்கு காலையில் கணவனை ஏற்றிவந்த அப்பெண், எரிபொருள் நிரப்புவருடன் பறந்து சென்றுவிட்டாள்.

​அன்றையதினம் கடமையை முடித்துகொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக, பஸ் நிலையம் திரும்பிய கணவன், மனைவியை காணாது அங்குமிங்கும் தேடியலைந்தார். மனைவியின் தொலைபேசியும் இயங்கவில்லை.

என்னவோ, ஏதோவென ஆட்டோவொன்றை பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற கணவன், வீடும் பூட்டியிருந்ததையடுத்து, தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினாலும், மனைவி தொலைபேசி இயங்கவில்லை.

தொடர்ந்து என்னசெய்வதென திகைத்திருந்த கணவனின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியொன்று வந்தது.

“நான், ஷெட் அய்யாவுடன் செல்கின்றேன். என்னை தேட வேண்டாம். நீங்கள். சந்தோஷமாய் இருங்கள்” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் கணவன் பொலிஸில் முறையிட்டுள்ளார். மூவரையும் அழைத்த பொலிஸார், கணவனையும் மனைவி​யையும் சேர்த்து வைப்பதற்கு பலமுறை முயற்சித்தனர். எனினும், அது கைகூடவில்லை.

“நான், இவருடன் சந்தோஷமாக வாழ்கின்றேன்” என பொலிஸாரிடம் தெரிவித்த மனைவி, எரிபொருள் நிரப்புவருடன், மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுவிட்டார்.

ஜோடி பறப்பதை அவதானித்த கணவன், கண்ணீர் மல்க, ​பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பினார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளையும் நண்பியையும் வல்லுறவுக்குள்ளாக்கியவர் கைது!

Pagetamil

அடங்க மறுக்கும் யாழ்ப்பாண போதைப்பையன்: 3வது முறையாக பெருந்தொகை மாத்திரைகளுடன் கைது!

Pagetamil

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

Pagetamil

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment