பரீட்சை கடமையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் போக்குவரத்து வசதிகள் முறையாக செய்யப்பட்டு, 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடனான இணையவழி கலந்துரையாடலின் போது, க.பொ.த சாதாரணதர பரீட்சையை சுமூகமாக ஆரம்பிப்பதற்கு பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியை அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு கொள்கைத் தீர்மானங்களை எட்டுவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்மானங்கள் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட மாகாணங்களிடமே ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1