பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் ரணிலின் நெருக்கமான கட்சியாக செயற்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி, ரணில் விக்கிரமசிங்கவை தற்போது ஆதரிப்பதில்லையென கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.
எனினும், ஏனைய இரண்டு பங்காளிக்கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கலாமென்ற முடிவில் உள்ளன.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றார். விரைவில் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கான பேச்சுக்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ரணிலை ஆதரிப்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சி கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. இன்று கட்சியின் அரசியல்குழு கூட்டம் நடந்தது.
‘தற்போது ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஆதரிப்பது போராடும் இளைஞர்களின் கோரிக்கைகளிற்கு எதிரானது” என தமிழ் அரசு கட்சியின் மூத்த பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
அதேவேளை, ஏனைய இரண்டு கட்சிகளிற்கும் வேறு அப்பிராயம் உள்ளதாக தெரிகிறது. தமது கட்சிக்குள் கலந்துரையாடி, பின்னர் கூட்டமைப்பிற்குள் கலந்துரையாயே இறுதி முடிவெடுக்கலாமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவான கலந்துரையாடலொன்று நடக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.