இலங்கையை விட்டு தப்பியோடும் எண்ணம் தனக்கோ, தந்தை மஹிந்த ராஜபக்ஷவிற்கோ கிடையாதென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி பொதுஜன பெரமுனவினர் அரங்கேற்றிய வன்முறையை தொடர்ந்து, பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து நையப்புடைத்ததில் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மற்றும் முக்கிய பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில், 3ஆம் திகதி வன்முறை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பல பெரமுன எம்.பிக்களிற்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாமல் தனது ருவிற்றரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
”திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். எனது தந்தைக்கோ அல்லது எனக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. தொடர்ந்து இங்கேயே இருப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார்;.