30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ராஜபக்சக்கள் இல்லாத அரசில் இணைய தயார்!

எந்தவொரு ராஜபக்சக்களையும் உள்ளடக்காத அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க., சில குழுக்களின் செயற்பாடுகளினால் ராஜபக்சக்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதை நாட்டுக்கு காண்பிக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிட்டதாக தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் ஊழல் குடும்பம் மக்களிடமிருந்து திருடுவதை தடுக்க எதிர்க்கட்சிகள் இன்னும் தயாராக இல்லை என்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை முற்றுகையிட்டு மக்களின் குரலை நசுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க, எனினும் ராஜபக்சக்கள் உண்மையான கைதிகளாக மாறிவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment