“என் உயிரே.. உனது தன்னலமற்ற செயலால் என் வாயடைத்துவிட்டது. நான் பெருமை கொள்கின்றேன்” என தனது மனைவியை பாராட்டி, வைத்தியர் ஒருவர் ருவிற்றரில் பதிவிட்டார்.
வைத்தியரை மெய்சிலிரிக்க வைக்கும்படியாக, அவரது மனைவி என்ன செய்திருப்பார்?
அவரது மனைவி 30 வயதில் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறியிருக்கிறார்.
இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் அவதானிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.
இரண்டு காரணங்களினால் இந்த தாக்குதல் கவனத்தை ஈர்த்தது.
முதலாவது, பட்டதாரியான இளவயது பெண் நடத்திய தாக்குதல்.
மற்றையது, சீன நாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டது.
தெற்காசியாவின் இரண்டு நாடுகளை தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்துள்ள சீனாவிற்கு இப்பொழுது புதிய தலையிடி ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் சீன சார்பு ஆட்சியாளர்களை பதவிவிலக வலியுறுத்தி, மக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானில் சீன சார்பு நிலையெடுத்த இம்ரான் கான் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் அமெரிக்காவின் பங்கு பற்றி ஏற்கனவே நிறைய செய்திகள் வெளிவந்து விட்டன.
இலங்கையில் ஆட்சியாளர்கள் மாறினாலும், நாடு சிக்கிக் கொண்டது என சீன திருப்திப்படலாம்.
முழுமையாக அறிய காணொளியை பாருங்கள்.